முகப்பு
தமிழ்நாடு

கரோனா குறைவதால் தளர்வுகள் வழங்கப்படுகிறது: ஜெயக்குமார்

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் தான் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On : 7 ஜனவரி 2021, 12:30 pm IST
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)
பகிர்:


தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் தான் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் 100 சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கு எதிர்ப்பு எழுந்தது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 

மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி மிக மிக கவனத்துடன் தளர்வுகள் கொடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

Advertisement

இதற்கு முன்பு இத்தகைய அறிவிப்பு கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய அவர், சுகாதாரத்துறையின் ஆலோசனையின் படியே தளர்வுகள் அறிவிக்கப்படுவதாகக் கூறினார்.

தமிழக திரையரங்குகளில் 100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.