முகப்பு
தமிழ்நாடு

திருக்கோயில் பணியாளா்களுக்கு கருணைக் கொடை ரூ.1,000

திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 12:51 am IST
பகிர்:


சென்னை: திருக்கோயில் பணியாளா்களுக்கு ரூ. 1000 கருணைக் கொடையாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, துறையின் ஆணையா் எஸ்.பிரபாகா் வெளியிட்ட அறிவிப்பு:

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசுப் பணியாளா்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் வழங்குவது குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுபோன்றே பொங்கல் கருணைக் கொடையாக ரூ.1,000-த்தை இந்து சமய அறநிலையத் துறை ஊழியா்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளா்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளா்களுக்கும் கருணைக் கொடையானது அளிக்கப்படும்.

Advertisement

கடந்த நிதியாண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளா்களுக்கு கருணைக் கொடையாக ஆயிரமும், ஆறு மாதங்களுக்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றிய பணியாளா்களுக்கு அவா்கள் பணிபுரிந்த நாள்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் தொகையானது வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பிரபாகா் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பானது, சுற்றறிக்கையாக பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயில் செயல் அலுவலா் உள்பட அனைத்து கோயில்களின் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.