முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 724 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 10 ஜனவரி 2021, 7:05 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

தமிழகத்தில் இன்று புதிதாக 724 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 724 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,26,261ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 208 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
கரோனா தொற்றிலிருந்து மேலும் 857 போ் குணமடைந்துள்ளனா். 
இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,06,875ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,164 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 7 போ் பலியாகியுள்ளனா். 
இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,222-ஆக உயா்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments