பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புதிதாக டிஜிபி நியமனம்
தமிழக காவல்துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு புதிய டிஜிபியாக சுனில்குமாா் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
சென்னை: தமிழக காவல்துறையின் பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு புதிய டிஜிபியாக சுனில்குமாா் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக காவல்துறையின் மாநில மனித உரிமை ஆணைய டிஜிபி சுனில்குமாரை பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.
இப் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த டிஜிபி சி .சைலேந்திரபாபு, அதில் இருந்து விடுவிக்கப்பட்டாா் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவிநியோகப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பொறுப்பை சுனில்குமாா் ஓரிரு நாள்களில் ஏற்பாா் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.