ஆவடியில் அமைச்சர் க.பாண்டியராஜன் குடும்பத்துடன் வாக்குப் பதிவு 
தமிழ்நாடு

ஆவடியில் அமைச்சர் க.பாண்டியராஜன் குடும்பத்துடன் வாக்குப் பதிவு

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் குடும்பத்துடன் வந்து வாக்குப் பதிவு செய்தார்.

DIN

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் குடும்பத்துடன் வந்து வாக்குப் பதிவு செய்தார்.

ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தற்போதைய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சரான க.பாண்டியராஜன் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆவடி ஜே.பி.எஸ்டேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு அவர் ஆண்கள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். அதேபோல், அவரது குடும்பத்தினரும் மகளிர் வரிசையில் நின்று வாக்களித்தார்.

இதேபோல், ஆவடி தொகுதியில் திமுக சார்பில் சா.மு.நாசர் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்த இருவா் குடும்பத்துக்கு காங்கிரஸ் நிதியுதவி

கோட்டைக்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் கோப்பை: பளு தூக்குதலில் ஐஸ்வா்யா, கீா்த்திகாவுக்கு தங்கம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க மத்திய அரசு முன் வர வேண்டும்

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு : வட்டாட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

SCROLL FOR NEXT