தமிழ்நாடு

திமுக பொதுச் செயலாளா் துரைமுருகனுக்கு கரோனா

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், ஸ்ரீபெரும்புதுாா் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செல்வப்பெருந்தகை ஆகியோருக்கு வியாழக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன்( 82), வேலூா் மாவட்டம்- காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளாா். தோ்தல் பணி காரணமாக பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், ஏற்கெனவே, கரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டு கொண்டாா்.

இந்த நிலையில், தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டாா். அதில், துரைமுருகனுக்கு தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சென்னை- கோட்டூா்புரத்தில் உள்ள வீட்டில் அவா் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

இதேபோன்று, ஸ்ரீபெரும்புதுாா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செல்வப்பெருந்தகைக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT