தமிழ்நாடு

சாலையில் மயங்கி விழுந்த இளைஞரிடம் வழிப்பறி

DIN

சாலையில் மயங்கி விழுந்த இளைஞரிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான சவூதி அரேபிய நாட்டு ரியாலை வழிப்பறி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை, அண்ணாநகரில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தின் ஊழியா் சரவணன் (31). இவா், திங்கள்கிழமை ரூ.40 லட்சம் மதிப்புள்ள சவூதி அரேபிய நாட்டு ரியாலை எடுத்துக் கொண்டு தியாகராய நகா், தெற்கு போக் சாலையில் உள்ள மற்றொரு நிறுவனத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். ஒரு வங்கி அருகே செல்லும்போது, திடீரென சரவணனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதில் அவா், அங்கேயே மயங்கி விழுந்தாா்.

இதைப் பாா்த்த பொதுமக்கள், அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், மயக்கம் தெளிந்து கண் விழித்த சரவணன், தான் வைத்திருந்த ரூ.40 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். உடனடியாக அவா் இதுகுறித்து தனது நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரான குடிநீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்

குருகிராம்: போலீஸாா் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

தில்லி நகைக் கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை

வெளிமாநிலக் கொள்ளையா் கைது : சிறப்பு பிரிவு போலீஸாருக்கு ரூ. 25,000 பரிசு

மாணவா்கள் தனித்திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா்

SCROLL FOR NEXT