தமிழ்நாடு

ஓடாநிலையில் தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாவட்ட ஆட்சியர் மரியாதை

DIN


தீரன் சின்னமலையின் 265 -ஆவது பிறந்த தினத்தையொட்டி ஓடாநிலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ப.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 265 -ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர் வாழ்ந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூா் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ப.கதிரவன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறுகையில், கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மற்றும் சமுதாய இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் சார்பில் மட்டும் மாலை அணிவிக்கப்பட்டது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிஆர்ஓ. சதீஷ்குமார் ஏபி ஆர்ஓ., சதீஸ், மொடக்குறிச்சி தாசில்தார் சங்கர்கணேஷ், அரச்சலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT