திருநெல்வேலி: திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலியில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருநெல்வேலி பொதிகை அறக்கட்டளை சார்பில் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கவிஞர் பேரா தலைமை வகித்தார். இதில், கலை மற்றும் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் வ.கோபால கிருஷ்ணன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.