தமிழ்நாடு

ஸ்டெர்லைட்டை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

DIN

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் ஆலையில் நான்கு மாதத்திற்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கண்டித்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மகேஷ் உள்ளிட்ட 10 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 

அப்போது தரையில் அமர்ந்து அனைத்து கட்சிகளிலும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஆட்சியர் வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் 10 பேரை கைது செய்து வாகனத்தில் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT