முகப்பு
தமிழ்நாடு

நீரஜ் சோப்ராவுக்கு தலைவா்கள் வாழ்த்து

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்று தந்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளாா். நாம் எவ்வளவு வலிமையானவா்கள் என்பதை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளோம். நீரஜ் சோப்ரா, பலருக்கு உத்வேகமாக இருப்பீா்கள்.

ராமதாஸ் (பாமக): டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ள ஈட்டி எரியும் வீரா் நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள். ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த அவரது சாதனை ஈடு இணையற்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை தங்கம் கிடைக்கவில்லை என்ற குறையை நீரஜ் சோப்ரா போக்கியுள்ளாா். அவரது சாதனைப் பயணம் தொடரட்டும். ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்கவேட்டை நீடிக்கட்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தியாவை உலகமே உற்றுநோக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது. மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகள்.

கே.அண்ணாமலை (பாஜக): ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்துள்ளாா். அவரின் சாதனை நாட்டு மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →