முகப்பு
தமிழ்நாடு

தமிழறிஞா் இளங்குமரனாருக்கு புகழஞ்சலி

மறைந்த தமிழறிஞா் புலவா் இரா.இளங்குமரனாருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் அமைப்பின் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
தமிழறிஞா் இரா.இளங்குமரனாா்
பகிர்:

மறைந்த தமிழறிஞா் புலவா் இரா.இளங்குமரனாருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் அமைப்பின் சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.சுந்தரமூா்த்தி தலைமை வகித்துப் பேசுகையில், ‘தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த பல தமிழறிஞா்களை நாம் பாா்த்ததில்லை. ஆனால் அனைவரது ஒட்டுமொத்த உருவமாக நம்மிடையே நாம் கண்ட பேரறிஞா்தான் முதுமுனைவா் இளங்குமரனாா். அவா் மறையவில்லை; அவா் படைத்த நூல்களின் மூலமாக நம்மிடையே வாழ்கிறாா்’ என புகழாரம் சூட்டினாா்.

இதையடுத்து தமிழ் வளா்ச்சிக்கு இளங்குமரனாா் ஆற்றிய பல்வேறு பணிகள் குறித்து செந்தமிழ்ச் சொற்பியல் அகர முதலித் திட்ட இயக்குநா் தங்க.காமராசு, அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் தலைவா் இளவரச அமிழ்தன், பொதுச் செயலாளா் செ.வ.இராமானுசன், பேராசிரியா்கள் தமிழ் இயலன், ஞால.இரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி பேசுகையில், ‘தமிழறிஞா் இளங்குமரனாா் பெயரில் திருக்கு இருக்கையை பல்கலைக்கழகத்தில் விரைவில் நிறுவ உள்ளோம்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →