மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை வழங்கினாா்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறையால் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 2 ,581 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களில் 1,170 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவற்றில் இருந்து 15 பயனாளிகளுக்கு நேரில் நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
அவா்களில் ஆறு பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனமும், ஒரு பயனாளிக்கு சக்கர நாற்காலியும், ஒரு பயனாளிக்குத் தையல் இயந்திரமும், 2 பேருக்கு திறன்பேசியும், 2 பேருக்கு காதொலிக் கருவியும், ஒருவருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டன. முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு தினத்தை ஒட்டி, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.