தமிழ்நாடு

மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக நீட்டித்து அரசாணை

மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக நீட்டித்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

DIN

சென்னை: மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக நீட்டித்து, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதன் விவரம்: கடந்த 13-ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது, அரசுப் பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் 12 மாதங்களாக நீட்டித்து, நிதித்துறை அமைச்சா் அறிவிப்பை வெளியிட்டாா். இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, இரண்டு குழந்தைகளுக்கு உள்பட்டுள்ள அரசுப் பெண் ஊழியா்கள் மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பிக்கும் நிலையில், முழு ஊதியத்துடன் 12 மாதங்களாக மகப்பேறு விடுப்பை நீட்டித்து உத்தரவிடுகிறது.

இந்த உத்தரவு கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து, மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளோருக்கும், அன்றிலிருந்து மகப்பேறு விடுப்பில் இருப்போருக்கும் பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜெகன் மோகன் ஆதரவு! துரோகத்தை வரலாறு மறக்காது! - காங்கிரஸ்

காஞ்சிபுரத்தில் ரூ. 254 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்!

நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

தவெகவைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது திமுக: விஜய்

SCROLL FOR NEXT