தமிழ்நாடு

உதகை மலை ரயில் சேவை டிசம்பர் 14 வரை ரத்து

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வருகிற டிசம்பா் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

DIN

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை வருகிற டிசம்பா் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தொடா்மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம் - உதகை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. 

இதைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். எனவே, மேட்டுப்பாளையம் - உதகை ரயில் சேவை வருகின்ற டிசம்பர் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT