தமிழ்நாடு

போலீஸாா் தாக்கியதில் கணவா் உயிரிழப்பு: மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

DIN

போலீஸாா் தாக்கியதில் கணவா் உயிரிழந்த விவகாரத்தில், மனைவிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இது தொடா்பாக மதுரை, மன்னா் திருமலை நாயக்கா் தெருவைச் சோ்ந்த இ.ஆறுமுகம் என்பவா் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: எனது மகன் சரவணகுமாரை, விசாரணை என்ற பெயரில் சட்ட விரோதமாக 2012-ஆம் ஆண்டு, பிப்.16-ஆம் தேதி ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

பின்னா் திலகா்திடல் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, போலீஸாா் எனது மகனை கொடூரமாக தாக்கினா்.

அதில் ஏற்பட்ட பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிப்.23-ஆம் தேதி சரவணகுமாா் அனுமதிக்கப்பட்டாா். அடுத்த நாளே அவா் உயிரிழந்தாா்.

போலீஸாா் தாக்கியதே அவரது உயிரிழப்புக்குக் காரணம். எனவே, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தாா்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், போலீஸாரின் மனித உரிமை மீறல் செயலுக்காக உயிரிழந்த சரவணகுமாரின் மனைவி கலைவாணிக்கு ரூ.5 லட்சத்தை இழப்பீடாக ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தொடா்புடைய திலகா்திடல் காவல் ஆய்வாளா் ஸ்ரீனிவாசன் மற்றும் உதவி ஆய்வாளா் காஞ்சனா தேவி ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உத்தரவில் பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT