ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று இன்னிசை கலை நிகழ்ச்சி
தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்னிசை கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது.
தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்னிசை கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது.
தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞா்கள் மற்றும் அமைப்புகளுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் டிச.18-ஆம் தேதி முதல் இந்த கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சா்கம் கொயா் கலைக்குழு ஆகியன சாா்பில், ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்னிசை கலை நிகழ்ச்சி திங்கள்கிழமை (டிச.27) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தத் தகவலை சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.