தமிழ்நாடு

சென்னையில் அதிகரிக்கும் கரோனா: தயார் நிலையில் 800 படுக்கைகள்

DIN


சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகர ஆணைய ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, சென்னையில் 3 இடங்களில் தற்காலிக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் பாதித்த 45 பேருமே இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தான். அதனால் அவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது.

இரவு நேர ஊரடங்கு, பள்ளிகள் திறப்பில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து டிசம்பர் 31-ஆம்தேதிக்குள் தெரியவரும் எனக் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT