முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் 
தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி தலைமறைவு: சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ-விடம் போலீசார் விசாரணை

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ள நிலையில், அவரிடம் நெருக்கமாக இருந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தனிப்படை போலீசார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வரு

DIN

விருதுநகர்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ள நிலையில், அவரிடம் நெருக்கமாக இருந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தனிப்படை போலீசார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆவின், மின்சாரத்துறை, இந்து சமய அறநிலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை பிடிக்க 8 தனிப்படை போலீசார் தமிழகம் மட்டுமன்றி கேரளம், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வருகின்றனர். 

இந்நிலையில், கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனை தனிப்படை போலீசார், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனர். 

அவரிடம் மதுரை டிஐஜி காமினி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். மனோகர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் முன்னாள் அமைச்சரரின் உதவியாளர் சீனிவாசனிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT