திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்பட 7 கோயில்களில் காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவ மையங்களை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

7 கோயில்களில் மருத்துவ மையங்கள்: காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்பட 7 கோயில்களில் மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

DIN

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்பட 7 கோயில்களில் மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

முதற்கட்டமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை(டிச.31) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர்-அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை-அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர்-அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர்- லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை-சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி-சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி- தண்டாயுதபாணி சுவாமி கோயில் (மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம்) ஆகிய 7 கோயில்களில் மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும்.

இப்பணிக்காக, ஒரு மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம், வீதம் 10 கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே. சேகர் பாபு, முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், காந்தி, சா.மு. நாசர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி. மோகன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்  சமீரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச.விசாகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறந்தாங்கி கடையில் திருடியவா் கைது

கல்வராயன்மலை: கைது செய்யப்படும் நபா்களை ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பரிசோதிக்க கோரிக்கை!

தாய்லாந்து-கம்போடியா விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம்! - டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்

காங்கயம் அருகே விவசாயி அடித்துக் கொலை

கஞ்சா வழக்கு: அக்.30-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

SCROLL FOR NEXT