முகப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு

இனிமை சூழ்ந்து, இன்னல் அகன்று நம்பிக்கையுடன் பிறக்கிறது புத்தாண்டு: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

"நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்"

தமிழ்நாடு

இனிமை சூழ்ந்து, இன்னல் அகன்று நம்பிக்கையுடன் பிறக்கிறது புத்தாண்டு: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

"நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்"

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:49 AM
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "இனிமை சூழ்ந்து - இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கில புத்தாண்டு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதக்குலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, எதிர்வரும் புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட உறுதிபூண்டுள்ளது.

நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும்.

'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' எனும் மானுடத் தத்துவம் பாடிய பெருமைக்குரிய நமது தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் செழித்திடவும், உலகில் வாழும் மக்கள் யாவரும் பேரிடரைக் கடந்து நலன் பெற்றிடவும் விழைகிறேன். நமது அரசுக்கு உறுதுணையாக விளங்கிடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →