காக்களூர் பால் பண்ணையில் கால்நடை தீவனக் கிடங்கு: முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையை அடுத்த காக்களூர் பால்பண்ணை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால் நடை தீவனக்கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தினை காணொலி காட்சி ம
தமிழ்நாடுகாக்களூர் பால் பண்ணையில் கால்நடை தீவனக் கிடங்கு: முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையை அடுத்த காக்களூர் பால்பண்ணை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால் நடை தீவனக்கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தினை காணொலி காட்சி ம
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையை அடுத்த காக்களூர் பால்பண்ணை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால் நடை தீவனக்கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர் பால் பண்ணை வளாகத்தில் நபார்டு 2017-18 திட்டத்தின் கீழ் ரூ.90.00 லட்சம் மதீப்பீட்டில் 2500 சதுர அடியில் ஒருங்கிணைந்த கால்நடை தீவன கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதனால் பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு தடையின்றி கால்நடை தீவனம் விநியோகம் செய்யப்படும். தற்போது அயனாவரத்தில் தலைமை இடமாக இயங்கிவரும் அலுவலகம் இத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள புதிய நிர்வாக அலுவலக கட்டடத்தில் 50 பணியாளர்களுடன் ஒன்றியத்தின் தலைமை இடமான காக்களூர் பால் பண்ணையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.