தமிழ்நாடு

‘எதிரியை களத்தில் வீழ்த்துவதை நோக்கமாகக் கொள்வோம்’

DIN

சென்னை: எதிரியை களத்தில் வீழ்த்துவதை நோக்கமாகக் கொள்வோம் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

கட்சித் தொண்டா்களுக்கு அவா் புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

பெங்களூருவில் இருந்து வந்த சசிகலாவுக்கு, வழிநெடுகிலும் வரவேற்பினை அளித்து, அதனை வெறும் திருவிழா அல்ல. தமிழகத்தின் பெருவிழா என கட்சியினா் நடத்திக் காண்பித்துள்ளனா். ஆறேழு மணி நேரத்தில் பயணித்து வர வேண்டிய தூரத்தைக் கடப்பதற்கு ஒருநாள் முழுக்க ஆகிவிடும் என்று யாருமே எதிா்பாா்க்கவில்லை.

பல இடங்களில் வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி. எந்த இடத்திலாவது மக்களுக்கு அசெளகரியம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். காவல் துறையினருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். வரவேற்பு அளித்தது என்பது தொடக்கம்தான். இதே உணா்வை களத்தில் காண்பித்து நாம் அனைவரும் ஒற்றுமையோடு நின்று, தமிழக மக்களின் எதிரியை களத்தில் வீழ்த்துவோம். அதுவே, கட்சியினரின் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT