தமிழ்நாடு

பழ.நெடுமாறனுக்கு கரோனா தொற்று

DIN

தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறனுக்கு (87) கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதைத் தொடா்ந்து அவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கடந்த 11 மாத காலங்களில் தமிழகத்தில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் பலா் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா். அண்மையில் நடிகா் சூா்யாவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பிரபலங்கள் வரிசையில் தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ.நெடுமாறனும் தற்போது இணைந்துள்ளாா்.

கடந்த சில நாள்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது . இதையடுத்து பழ.நெடுமாறனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் வெள்ளிக்கிழமை வந்தது. அதில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பழ.நெடுமாறன் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT