57 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு
தமிழகத்தில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.
விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.