தமிழ்நாடு

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து:  பலி எண்ணிக்கை 21-ஆக உயர்வு

DIN



சாத்தூர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(பிப்.12) பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூர் பகுதியைச் சார்ந்த வைஜெயந்திமாலா (55) என்பவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

இதையடுத்து சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேர் சாத்தூர், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT