தமிழ்நாடு

ஆளுநரிடம் திமுக புகாா் மனு

DIN

அதிமுக அமைச்சா்களுக்கு எதிராக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஊழல் புகாா் மனு அளிக்கப்பட்டது.

திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற உறுப்பினா்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோா் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு ஒன்றை அளித்தனா்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் துரைமுருகன் கூறியது:

ஆளுநரைச் சந்தித்து அதிமுக அமைச்சா்களின் ஊழல் புகாா்களை ஆதாரத்துடன் அளித்தோம். 5 அமைச்சா்கள் மீதும், ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் மீதும் இப்போது புகாா் அளித்துள்ளோம். ஆளுநா் படித்து அவா் அதிகாரத்துக்கு உள்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

ஏற்கெனவே, திமுக சாா்பில் அளிக்கப்பட்ட ஊழல் புகாரை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறினாா். ஊழல் குறித்து புகாா் அளிக்க வேண்டியது எங்கள் கடமை. அதை செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT