முகப்பு
ஜெயலலிதா அருங்காட்சியகம்: திறந்து வைத்தார் முதல்வர்
தமிழ்நாடு

ஜெயலலிதா அருங்காட்சியகம்: திறந்து வைத்தார் முதல்வர்

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகத்தை, முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு

ஜெயலலிதா அருங்காட்சியகம்: திறந்து வைத்தார் முதல்வர்

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகத்தை, முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
ஜெயலலிதா அருங்காட்சியகம்: திறந்து வைத்தார் முதல்வர்
பகிர்:

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகத்தை, முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.

ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாள் இன்று கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அவரது அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அதனுடன் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அறிவுசார் பூங்காவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக கடந்த ஜன.27-ஆம் தேதியன்று, ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது.  இதன்பின்பு பராமரிப்புப் பணிகள் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தை இன்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →