தமிழ்நாடு

வியாபாரம் மந்தமாம்: புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை ரூ.160 கோடி

DIN


சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டை முன்னிட்டு ஒரே நாளில் ரூ.160 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதே நாளில் 2019-ஆம் ஆண்டில் ரூ.150 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

எனினும், இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகவில்லை என்றும், இரவு நேர ஊரடங்கும், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டதும் அதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளையில், 2020, டிசம்பர் 30-ம் தேதி ரூ.113 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாகவும், 2019-ல் ரூ.92 கோடிக்கு விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் ரூ.48 கோடிக்கும், சேலத்தில் சுமார் ரூ.27 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT