கோவையிலிருந்து கோபி நோக்கிச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை சிறப்பு வரவேற்பு வழுக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது..
திமுக ஆட்சியில் அமர 4 மாதங்கள் தான் உள்ளது. ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட 4 மாதங்கள் தான். ஊழல் செய்து வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு 4 மாதங்கள் தான்.
தயாகிவிட்டீர்களா நிராகரிப்போம் அதிமுகவை, ஆதரிப்போம் திமுகவை என்று கூறி புறப்பட்டார். இதில் மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.