கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணி துவக்கம்
தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றங்கால் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பாசன பரப்பில், 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் பாசன நிலங்கள் உள்ளன. இவற்றில் முதல் போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
கம்பம் சின்னவாய்க்கால், குளத்து பாசனம், உத்தமுத்து பாசன பரப்புகளில் பரம்படித்தல், நெல் நாற்றங்கால் பயிரிடுதல், நடவு நடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வாய்க்கால் பாசன பரவு விவசாயி மா.அய்யப்பன் கூறியது,
கம்பம் பாசன நிலங்களாக வாய்க்கால் பரவு, குளத்து பரவு, உத்த முத்து ஆகிய பாசன பரப்புகளில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அணையில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.