தமிழ்நாடு

ஆற்காட்டில் திருவள்ளுவர் தின விழா

DIN

ஆற்காடு: ஆற்காடு நகர திமுக சார்பில்  திருவள்ளுவர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகர செயலாளர் ஏ.வி சரவணன் தலைமை வகித்தார். அவைதலைவர்  பொன்ராஜசேகர், மாவட்ட பிரதிநிதிகள் கஜேந்திரன், சிவா,லிங்கேஷ், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் ஆ.ப. கணேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆற்காடு தொகுதி எம் எல் ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட திமுக துணை செயலாளர் ஏ.கே.சுந்தர மூர்த்தி ஆகியோர்  பஜார் வீதியில் உள்ள  திருவள்ளுவர் உருவ சிலைக்கு  மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள். 

விழாவில் பொதுக்குழு உறுப்பினர் பி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு நகர தமிழ்வளர்ச்சி மன்றம் சார்பில்  கவிஞர் மா.ஜோதி தலைமையில் பொற்கோ வாசுதேவன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீடாகும் படையப்பா!

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 49 தொகுதிகள் யார் பக்கம்?

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

வங்கக்கடலில் மே 22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

SCROLL FOR NEXT