தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

DIN

திருச்சி: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களுக்கு அச்சம் நீக்குவதற்காக தானும் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை என உறுதியளித்தார்.

மேலும் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT