தமிழ்நாடு

ஞானதேசிகன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி

DIN


சென்னை: மறைந்த ஞானதேசிகன் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  இரங்கல் தெரிவித்தார்.

த.மா.கா.வின் மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவரது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். அப்போது த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உடன் இருந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் உடல்நலக் குறைவால் ஜன. 15-ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த பி.எஸ். ஞானதேசிகன், உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த நவம்பர் 11-ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் சுரகேஸ்வரா் கோயிலில் அட்சய திருதியை நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி 85.48%

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி மரணம்

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி மரணம்

கண்ணாளனை தேடுகிறாரா.. அதிதி!

SCROLL FOR NEXT