முகப்பு
தமிழ்நாடு

ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: கரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவக் குழுவினருடன், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தும் முதல்வர் பழனிசாமி.
பகிர்:


சென்னை: கரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 11 மணிக்கு ஆட்சியர்களுசன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்.

இதனைத்தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெள்ளிக்கிழமை மதியம் மருத்து குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 

பின்னர் மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

பி.2 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி. 

இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் மற்றும் அரசியல் விவகாரங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.