மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டிய துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் தேசிய மருத்துவர் தின விழா: மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு

புதுச்சேரியில் தேசிய மருத்துவர்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN



புதுச்சேரியில் தேசிய மருத்துவர்கள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார் துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், துணைநிலை ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று, கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

மருத்துவர்கள் தங்கள் சேவைப் பணியோடு, தங்களது உடலையும் கவனித்துக்கொள்ள வேண்டும், அது அவர்களுக்கும், இந்த சமுதாயத்திற்கு நன்மையாக அமையும் என்று ஆளுநர் அறிவுரை வழங்கினார்.

மருத்துவர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை ஆளுநர் நட்டு வைத்தார்.

விழாவில் சுகாதாரத்துறை செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், மருத்துவக் கல்லூரி இயக்குனர் உதயகுமார் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

SCROLL FOR NEXT