புதுவையில் 4 மாதங்களுக்குப் பின் புதிய பாதிப்பு 100-க்குள் பதிவு
புதுவையில் நேற்று 3 மாதங்களுக்கு பிறகு கரோனா உயிரிழப்பு பதிவாகாத நிலையில், 4 மாதங்களுக்குப் பின் இன்று புதிய பாதிப்பு 100-க்குள் பதிவாகியுள்ளது.
புதுவையில் நேற்று 3 மாதங்களுக்கு பிறகு கரோனா உயிரிழப்பு பதிவாகாத நிலையில், 4 மாதங்களுக்குப் பின் இன்று புதிய பாதிப்பு 100-க்குள் பதிவாகியுள்ளது.
புதுவையில் இன்று புதிதாக 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தலா ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,771 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 4,214 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 81, காரைக்காலில் 6, ஏனாமில் 1, மாஹேயில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, புதுவையில் சுமார் 4 மாதங்களுக்குப் பின் கரோனா பாதிப்பு நூறுக்குள் பதிவாகியுள்ளது. கடைசியாக மார்ச் 25ஆம் தேதி புதுவையில் 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மருத்துவமனைகளில் 246 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,167 பேரும் என மாநிலம் முழுவதும் 1,413 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே 171 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,15,873-ஆக உயர்ந்துள்ளது.