முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் 94 பேருக்கு கரோனா: 11 குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு

புதுவையில் சனிக்கிழமை நிலவரப்படி 15 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
புதுவையில் 94 பேருக்கு கரோனா: 11 குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு
பகிர்:

புதுவையில் சனிக்கிழமை நிலவரப்படி 15 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 70 நபர்களுக்கும், காரைக்காலில் 19 நபர்களுக்கும், மாஹேவில் 2 , ஏனாமில் 3 நபர்களுக்கும் என மொத்தம் 94 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாநிலத்தில் 1,170 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை 1,16,657 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் இருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால், மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,776 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 1,19,603 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்குத் தொற்று
புதுவையில் சனிக்கிழமை நிலவரப்படி 15 குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். அதில் 11 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 5 வயதுக்கு கீழ் 8 பேருக்கும், 5 வயதிற்கு மேல் 3 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் தாயார் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.