தமிழ்நாடு

சொகுசுக் காா் வழக்கில் அபராதம்: நடிகா் விஜய் மேல்முறையீடு

DIN

வெளிநாட்டு சொகுசுக் காருக்கு நுழைவு வரி வசூலிக்ககத் தடை கோரிய வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிா்த்து நடிகா் விஜய் உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.

நடிகா் விஜய் கடந்த 2012-இல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தாா். இந்த காருக்கு தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் விஜய் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து, நடிகா் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். அந்தத் தொகையை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

நடிகா்கள் முறையாக, சரியான நேரத்தில் வரி செலுத்தி உண்மையான நாயகா்களாக இருக்க வேண்டும் என தீா்ப்பில் கூறியிருந்தாா்.

இந்த தீா்ப்பை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், நடிகா் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காா்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்கக் கோரி பல வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது. எனவே வரி விலக்கு கோரியதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனு, வரும் திங்கள்கிழமை (ஜூலை 19) விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT