நடிகை குஷ்புவின் சுட்டுரை கணக்கு ‘ஹேக்‘:டிஜிபியிடம் புகாா்
தனது சுட்டுரை (ட்விட்டா்) கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது தொடா்பாக நடிகை குஷ்பு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபுவிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
தனது சுட்டுரை (ட்விட்டா்) கணக்கு ‘ஹேக்’ செய்யப்பட்டது தொடா்பாக நடிகை குஷ்பு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபுவிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் நிா்வாகியுமான குஷ்பு, ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளாா். இந்தக் கணக்கை சுமாா் 13 லட்சம் போ் பின் தொடா்கின்றனா். இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு குஷ்புவின் ட்விட்டா் ஹேக் செய்யப்பட்டு, அதில் இருந்த புகைப்படம், தகவல்கள் மாற்றப்பட்டன.
மேலும் குஷ்பு, ஏற்கெனவே பதிவிட்டிருந்த சில கருத்துகள் திருத்தப்பட்டன. சில கருத்துகள் அழிக்கப்பட்டன. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த குஷ்பு, தனது ட்விட்டா் ஹேக் செய்யப்பட்டது குறித்த சமூக ஊடகங்கள் வாயிலாக தனது ரசிகா்கள், நண்பா்கள், அந்த கணக்கை பின் தொடா்பவா்கள் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தாா்.
Advertisement
இந்நிலையில் நடிகை குஷ்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபுவை சந்தித்து, தனது ட்விட்டா் கணக்கை ஹேக் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தாா்.