தமிழ்நாடு

மானாமதுரையில் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் சித்தர் மாயாண்டி சுவாமிகள் 164 வது அவதார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்டிக்குளம் கிராமத்திலுள்ள மாயாண்டி சுவாமிகளின் கருப்பனேந்தல் மடத்தில் தவச்சாலையில் நடைபெற்ற அவதார விழாவை முன்னிட்டு குலாலர் சமுதாய சிவாச்சாரியார்களால் புனித நீர் கலசங்கள் வைத்து யாக வேள்வி நடத்தப்பட்டது. அதன்பின் பூர்ணாஹூதி நடந்து தீபாராதனை காட்டப்பட்டதும் மாயாண்டி சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்பின் சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. மடத்தில் உள்ள பிற பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திரளான பக்தர்கள் கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்துக்கு வந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து மாயாண்டி சுவாமியை தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT