தமிழ்நாடு

கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி: முன்னிலையில் தமிழ்நாடு

DIN

நாட்டிலேயே அதிகமாக தமிழகத்தில் 78,838 கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வைத் தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என, ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்த, மத்திய சுகாதார அமைச்சகம் ஜூலை 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாட்டில் இதுவரை 2.27 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளன. அதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 78,838 கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 

மேலும் ஆந்திரத்தில் 34,228, மத்தியப் பிரதேசத்தில் 21,842, கேரளத்தில் 18,423, கர்நாடகத்தில் 16,673 கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முதலாக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி தமிழகத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியில்தான் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT