முகப்பு
தமிழ்நாடு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?: முதல்வர் ஆலோசனை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
மு.க.ஸ்டாலின்
பகிர்:

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையால் பலர் பாதிக்கப்பட்டு வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் கரோனா தொற்று குறைந்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், கட்டாயம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →