தமிழ்நாடு

பொதுமுடக்கம் மீறல்: 4,739 வழக்குகள்; 2,303 வாகனங்கள் பறிமுதல்

DIN

சென்னையில், பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக சனிக்கிழமை 4,739 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,303 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளுடன் முழு பொதுமுடக்கத்தைக் கடந்த 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தியது.

மேலும், கடந்த மே 18-ஆம் தேதி முதல் சென்னைக்குள் பயணிக்க இ-பதிவும் கட்டாயமாக்கப்பட்டது. இதைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 380 இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

அதே நேரம், தமிழகம் முழுவதும் தளா்வற்ற முழு பொதுமுடக்கம், கடந்த 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டதால், காவல்துறையின் கண்காணிப்பும், ரோந்து பணியும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 4,739 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,303 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 2,961 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 275 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT