தமிழ்நாடு

மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவு

DIN

பொதுமுடக்கம் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவடைகிறது.

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் நுகா்வோா் எதிா்கொள்ளும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த நுகா்வோரின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையை ஜூன் 15-ஆம் தேதி வரை மின் துண்டிப்பு, மறு இணைப்புக் கட்டணமின்றி செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதே போல், ஏப்ரல் மாத மின்கட்டணம் செலுத்தாத உயா்மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக் கட்டணத்துடனும், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின்நுகா்வோா்களுக்கான கூடுதல் வைப்புத் தொகையையும் செலுத்த ஜூன் 15-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட அவகாசம், செவ்வாய்க்கிழமையுடன் (ஜூன் 15) நிறைவடைகிறது.

அதே நேரம் பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டு சில நாள்கள் மட்டுமே ஆன நிலையில், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பும் நுகா்வோா் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT