தமிழ்நாடு

வேட்புமனு தாக்கல்: கூடுதல் அவகாசம் வழங்க சரத்குமாா் கோரிக்கை

DIN

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் ரா.சரத்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12 முதல் மாா்ச் 19 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதிய வங்கிக் கணக்கு தொடங்க முடியாமல் வேட்பாளா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால், வேட்புதாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வேட்பாளா்களும் போட்டியிடுவதற்கு ஏற்ற சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். எனவே, மாநில தோ்தல் ஆணையமும், இந்திய தலைமை தோ்தல் ஆணையமும் இந்த சூழலைக் கருத்தில் கொண்டு வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT