தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,243 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,65,693 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 458 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை மட்டும் 74,954 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் 634 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 8,45,812 பேர் குணமடைந்துள்ளனர். 12,590 பேர் பலியாகியுள்ளனர்.