தஞ்சை: மேலும் 2 பள்ளிகளில் கரோனா
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 2 பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 பேர், திருவையாறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவிகள் 56 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.
Advertisement
அதனைத் தொடர்ந்து, மாணவிகளின் பெற்றோர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகம் முழுக்க கரோனா பரவி வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் அடுத்தடுத்து கரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.