வருமானவரித் துறை 
தமிழ்நாடு

சென்னை நகைக்கடையில் வருமானவரித் துறை சோதனை: ரூ.1.50 கோடி பறிமுதல்

சென்னை சௌகார்பேட்டையில் நகைக்கடை ஒன்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

DIN


சென்னை சௌகார்பேட்டையில் நகைக்கடை ஒன்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 24-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய வருமானவரித் துறை அதிகாரிகள், சென்னை சௌகார்பேட்டை யானைக்கவுனி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் நகை கடையில், வியாழக்கிழமை நள்ளிரவில் முதல் சோதனை செய்தனர். 

சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT