பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தில்லியிலிருந்து புறப்பட்டு கேரளம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடியின் முழுப் பயண விவரம்:
- தில்லியிலிருந்து தனி விமானம் மூலமாக செவ்வாய்க்கிழமை காலை 7.10 மணி அளவில் புறப்படும் பிரதமர் மோடி காலை 10.15 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
- கோவையிலிருந்து காலை 10.20 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலமாக கேரள மாநிலம் பாலக்காட்டை 10.50 மணி அளவில் சென்றடைகிறார். அங்கு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.
- பிற்பகல் 12 மணி அளவில் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.45 மணி அளவில் தாராபுரம் பொதுக்கூட்ட மேடைக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். சுமார் 55 நிமிடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.
- இதன்பிறகு, பிற்பகல் 13.45 மணி அளவில் புறப்பட்டு 2.20 மணி அளவில் கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
- கோவையிலிருந்து தனி விமானத்தில் 2.25 மணி அளவில் புறப்பட்டு 3.30 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார்.
- பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து 3.35 மணி அளவில் புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார்.